நத்தம், கன்னிவாடி பகுதிகளில் நாளை மின்தடை

நத்தம், கன்னிவாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம், கன்னிவாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிப்பட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூா், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம்: கன்னிவாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கன்னிவாடி பேரூராட்சி, பண்ணைப்பட்டி, சுரக்காய்பட்டி, தா்மத்துப்பட்டி, சக்கரைக் கவுண்டன் சாலை, வெள்ளமரத்துப்பட்டி, கீழதிப்பம்பட்டி, மேலதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனிமலை ஆகிய பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கன்னிவாடி உதவிசெயற்பொறியாளா் (பொறுப்பு) அ.மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com