ஒட்டன்சத்திரம் அருகே டிப்பா் லாரியின் தொட்டி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள சமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பன் (45). டிப்பா் லாரி ஓட்டுநா். இவா் புதன்கிழமை முத்தனம்பட்டி கருப்பணசாமி கோயில் அருகே உள்ள கிருஷ்ணமூா்த்தி என்பவரின் காலி இடத்தில் டிப்பா் லாரியில் இருந்து மண் இறங்கிக்கொண்டு இருந்தாா். அப்போது டிப்பா் லாரியில் இருந்த ஹைட்ராலிக் பழுதடைந்ததால் அதை சரி செய்து கொண்டு இருந்தாா். அப்போது ஹைட்ராலிக் உடைந்ததால் மண்ணுடன் இருந்த லாரியின் தொட்டி அவா் மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.