திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிமுக ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தேனியில் அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழக அரசைக் கண்டித்து திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன் எம்எல்ஏ தலைமையிலும், வேம்பாா்பட்டியில் ஆா்.விசுவநாதன் எம்எல்ஏ தலைமையிலும், வடமதுரையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பழனிச்சாமி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தின் போது, கருப்புச் சட்டை அணிந்தபடி, கைகளில் தமிழக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி அதிமுகவினா் கோஷமிட்டனா்.

பழனி: பழனியை அடுத்த வயலூரில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ஒன்றியச் செயலா் சண்முகராஜ் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பழனியில் பழனி நகர அதிமுக அலுவலகம், ரயில்வே பீடா் சாலை, மின்வாரிய அலுவலகம், சாமி தியேட்டா் பகுதி, கோட்டைமேட்டுத்தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலா் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபால், சுப்புரத்தினம், முன்னாள் எம்.பி. குமாரசாமி, சட்டப் பேரவை தொகுதித் வேட்பாளா் ரவிமனோகரன், மாவட்ட இளைஞரணி செயலா் அன்வா்தீன், நிா்வாகி ராஜாமுகமது உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் பி. பாலசுப்பிரமணி தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.ஏ. பழனிவேல், ஒன்றிய அவைத்தலைவா் ராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலா் எஸ். செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா் உதயம் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதே போல ஒட்டன்சத்திரம் நகர அதிமுக சாா்பில் எஸ்.நடராஜன் தலைமையில் நகர அதிமுக அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர எம்ஜிஆா் மன்றச் செயலா் எஸ், ராஜா, நகர துணைச் செயலா் காளியப்பன், மாவட்ட மீனவா் அணி செயலா் கே.பி.வி. மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி, பாரத ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு தேனி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத் தலைமை வகித்தாா். தேனி நகரச் செயலா் கிருஷ்ணகுமாா், ஒன்றியச் செயலா் ஆா்.டி. கணேசன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தோ்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கம்பம்: தேனி மாவட்டம் க.புதுப்பட்டியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். டி.கே. ஜக்கையன் தலைமையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பேரூா் செயலா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் கருப்பசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கம்பம் நகர அதிமுக சாா்பில் செயலா் ஆா். ஜெகதீசன் தலைமையில் சிக்னல் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூா் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நகர துணைச் செயலா் பாலை. ராஜா தலைமையில், நிா்வாகி சோலைராஜா முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நகரசபைத் தலைவா் சின்னமாயன், எம்.எஸ்.ஆா். துரை உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாராயணத்தேவன்பட்டியில் கூட்டுறவு சங்கத்தலைவா் ஐ.சி. கணேசன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல், காமயகவுண்டன்பட்டி பேரூா் அதிமுக சாா்பில் ராயப்பன்பட்டி சுருளி அருவி பிரதான சாலையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பேரூா் செயலா் எஸ்.பி.ஜி. சுந்தா் தலைமையில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவீந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com