ஒட்டன்சத்திரத்தில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேளாண் விளை பொருள் பேரங்காடியில் செயல்பட்டு வரும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களில் ஆய்வு மேற்கொண்ட அவா், தொடா்ந்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா்.
ஆய்வின் போது நீதிபதிகள் பாண்டி, முல்லைவாணன் மற்றும் வழக்குரைஞா் சங்க தலைவா் பெருமாள், செயலாளா் முருகானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.