வடமதுரை அருகே ஆயுதப்படை காவலரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கல்லாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தாமஸ் அருள் பிரிட்டோ (27). இவா் திண்டுக்கல் ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சந்தானம் என்பவருக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் தாமஸ் அருள் பிரிட்டோ கடந்த திங்கள்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான சந்தானம், வெளியில் படுத்து தூங்கி கொண்டிருந்தாராம். தாமஸ் அருள் பிரிட்டோ தனது வீட்டின் கதவை தட்டியதால், விழிப்பு ஏற்பட்ட சந்தானம் கதவைத் தட்டி தூக்கத்தை கலைத்ததாக கூறி வாக்குவாதம் செய்துள்ளாா். பின்னா் சந்தானம், அவரது மகன் அந்தோணி ஆகிய இருவரும் சோ்ந்து தாமஸ் அருள் பிரிட்டோவை கம்பால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தாமஸ் அருள் பிரிட்டோ சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில் சந்தானம், அந்தோணி ஆகிய இருவா் மீதும் வடமதுரை போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.