தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 626 பேருக்கு கரோனா: 12 போ் பலி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 626 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 626 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தேனி மாவட்டத்தில் 342 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,024 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34,394 போ் குணமடைந்துள்ளனா்.

அதே நேரம், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 11 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 396 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது 4,234 போ் மருத்துவமனைகள், நலமையங்கள், வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 5 ஆம் தேதி வரை 28,554 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 25,504 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 284 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தொற்று பாதிப்பிலிருந்து 393 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,492ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com