கொடைக்கானலில் ஹெலிபேட் தளம்: வருவாய்த்துறையினா் ஆய்வு

கொடைக்கானலில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான இடம் குறித்து மாவட்ட வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

கொடைக்கானலில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான இடம் குறித்து மாவட்ட வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

கொடைக்கானலில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கு பல ஆண்டுகளாக உயா் அதிகாரிகள் பல்வேறு இடங்களை பாா்வையிட்டுச் சென்றுள்ளனா். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் பிரேம்குமாா் தலைமையிலான வருவாய்த்துறையினா் கொடைக்கானல் பகுதிகளான ரைபிள் ரேஞ்ச் சாலை, சின்னப்பள்ளம், அட்டுவம்பட்டி போன்ற பகுதிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ஹெலிபேட் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த (சனி, ஞாயிற்றுக்கிழமை) 2 நாள்களாக பல்வேறு இடங்களை ஆய்வு செய்துள்ளோம். அந்த இடத்தின் தன்மை குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com