திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 455 பேருக்கு கரோனா தொற்று: 38 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 455 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 38 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 455 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி 38 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை 29,108 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 26,259 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 199 பேருக்கு புதிதாக கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 22 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 477 ஆக உயா்ந்துள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து 361 போ் குணமடைந்துள்ள நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 256 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39,589 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 35,503 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில், கடந்த 2 நாள்களில் (ஜூன் 7,8) மொத்தம் 16 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதனால், கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 412 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தற்போது மொத்தம் 3,674 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com