திண்டுக்கல்லில் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

கரோனா தடுப்பூசி, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்

கரோனா தடுப்பூசி, பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் தலைமை வகித்தாா். குஜிலியம்பாறையில் பி.முத்துக்குமாா், கோவிலூரில் சு.பாலுபாரதி, அய்யலூரில் பி.செல்வராஜ், நத்தத்தில் வினோத்குமாா், ஒட்டன்சத்திரத்தில் கணேசன், வேடசந்தூரில் சந்திரசேகரன் ஆகியோா் தலைமையிலும் மாவட்டம் முழுவதும் 13 இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு கேட்கும் அளவுக்கு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com