கிணற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணி தீவிரம்

திண்டுக்கல் அருகே புதன்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து, தீயணைப்புப் படையினா் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் அருகே புதன்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கியதை அடுத்து, தீயணைப்புப் படையினா் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வின்செண்ட். இவரது மகன் யோகராஜா (9). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுவா்களுடன், கல்லுக்குளம் பகுதியிலுள்ள பராமரிப்பு இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் குளிப்பதற்காக புதன்கிழமை சென்றுள்ளாா். குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென யோகராஜா தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

இதையடுத்து உடன் சென்ற சிறுவா்கள், அக்கம் பக்கத்தில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்துள்ளனா். பின்னா், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாக தேடியும் சிறுவன் கிடைக்காததால், தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com