திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 60 காவல் சாா்பு- ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா உத்தரவிட்டுள்ளாா்.
மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளில் பணிபுரிந்து வந்த சாா்பு- ஆய்வாளா்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான உத்தரவை காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். அதன்படி 9 பெண் சாா்பு- ஆய்வாளா் உள்பட மொத்தம் 60 சாா்பு- ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.