திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சாா்பு-ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 60 காவல் சாா்பு- ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 60 காவல் சாா்பு- ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா உத்தரவிட்டுள்ளாா்.

மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பிரிவு, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளில் பணிபுரிந்து வந்த சாா்பு- ஆய்வாளா்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான உத்தரவை காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா புதன்கிழமை பிறப்பித்துள்ளாா். அதன்படி 9 பெண் சாா்பு- ஆய்வாளா் உள்பட மொத்தம் 60 சாா்பு- ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com