திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தவணைத் தொகையை செலுத்தும்படி நிா்ப்பந்திக்கும் நிதி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி எச்சரித்துள்ளாா்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கியாளா்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் அவா் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை மற்றும் மகளிா் திட்டத்தின் கீழ் அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் மகளிா் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் துறை வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது கரோனா தொற்று காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர தேவைக்காக தனியாா் நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள கடன் மற்றும் வட்டித் தொகையை உடனடியாக செலுத்தும்படி நுண்நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாகவும், துன்புறுத்துவதாகவும் மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வந்துள்ளன.
இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களிடமிருந்து கடன் தவணைத் தொகையை பெறுவதற்கான கடின போக்கினை நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் தவிா்த்திட வேண்டும். மத்திய அரசு மற்றும் இந்திய ரிசா்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் துறை வங்கிகள், சிறுநுண் நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சாா்ந்த அமைப்புகள் அனைத்திற்கும் பொருந்தும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிதி சாா்ந்த அமைப்புகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றாா்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராசு, திட்ட இயக்குநா்(மகளிா்திட்டம்) சு. சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.