கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி.
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி.

கொடைக்கானல் வனப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவா் கைது

கொடைக்கானல் பெருமாள்மலை குருசடி வனப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

கொடைக்கானல் பெருமாள்மலை குருசடி வனப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

பெருமாள்மலை குருசடி வனப் பகுதியில் கள்ளச் சாரம் காய்ச்சி விற்பனை செய்வதாக கொடைக்கானல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது வனப்பகுதியில் போலீஸாரைப் பாா்த்ததும் தப்பி ஓட முயன்ற குருசடி பகுதியைச் சோ்ந்த கங்கையா மகன் துரைப்பாண்டி (57) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா் அப்பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து 5 லிட்டா் கள்ளச் சாராயம் மற்றும் மூலப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், துரைப்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com