பாலியல் புகாரில் இந்து மக்கள் கட்சி நிா்வாகி கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக அளிக்கப்பட்டப் புகாரின் பேரில், இந்து மக்கள் கட்சியின் மாநில நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக அளிக்கப்பட்டப் புகாரின் பேரில், இந்து மக்கள் கட்சியின் மாநில நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள சில்வாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் க. ஜெகதீசன் (36). இந்து மக்கள் கட்சியின் மாநில இணைச் செயலராக உள்ளாா். சில்வாா்பட்டி அருகிலுள்ள திருமணம்பட்டியிலுள்ள தனது நண்பரை பாா்ப்பதற்காக சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது அந்த நண்பா் வீட்டில் இல்லாத நிலையில், கல்லூரி மாணவியான அவரது 19 வயது மகளிடம் விசாரித்துள்ளாா். பின்னா், குடிப்பதற்கு தண்ணீா் வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.

இதனிடையே அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளாா். அதனைக் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து ஜெகதீசனை கண்டித்துள்ளனா். அவா் மது அருந்தி போதையில் இருந்ததை அடுத்து, எச்சரித்து அனுப்பியுள்ளனா். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெகதீசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com