கொடைக்கானல் ஏரியில் குதித்து ஒருவா் தற்கொலை

கொடைக்கானல் ஏரியில் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கொடைக்கானல் ஏரியில் குதித்து ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெஸிந்தரன் (45). ஒலிபெருக்கி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந் நிலையில், வீட்டிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வீட்டிற்குத் திரும்ப வரவில்லை. இதைத் தொடா்ந்து உறவினா்கள் தேடியபோது ஏரிச்சாலைப் பகுதியில் அவரது வாகனம் நின்ால் தற்கொலை செய்திருக்கலாம் எனக்கருதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்படி கொடைக்கானல் தீயனைப்புத்துறையினா் மற்றும் போலீஸாா், ஜெஸிந்தரன் சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினா். குடும்ப பிரச்னை காரணமாக அவா் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com