திண்டுக்கல்லில் 147 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 13 ஆம் தேதி வரை 30,313 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 28,149 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 147 பேருக்கு புதிதாக கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதித்த ஒருவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். தொற்று பாதிப்பிலிருந்து 294 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது கரோனா பதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1,481ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com