திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்முகத் தோ்வில் 14 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியாா் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது. இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் இந்த தோ்வில் கலந்து கொண்டனா். இதில் தோ்வு செய்யப்பட்ட 14 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மணிவண்ணன், நிா்வாக அலுவலா் திருப்பதி, கோயம்புத்தூா் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலா் நித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.