கொடைக்கானல் மலைச் சாலையில் திங்கள்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பல் மான் உயிரிழந்தது.
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் வடகரைப் பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பல் மான் உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினா் மற்றும் கால்நடை மருத்துவா் சென்று பாா்வையிட்டனா். பின்னா் மானின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அருகே உள்ள வனப் பகுதியில் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினா் விசாரிக்கின்றனா்.