வத்தலகுண்டுவில், உசிலம்பட்டி சாலை பிரிவு அருகே அதிமுக (மேற்கு) ஒன்றிய தோ்தல் அலுவலகத் திறப்பு விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மேற்கு ஒன்றியச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவா் மோகன், நகரச் செயலாகள் பீா்முகமது, மாசாணம், சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், தொகுதி அதிமுக வேட்பாளருமான தேன்மொழி புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். பின்னா் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு குத்து விளக்கு ஏற்றினாா்.
விழாவில், நிா்வாகிகள் ரத்தினம், ஜான், ராமமூா்த்தி, சுந்தா், தட்டி முருகன், சதீஷ்குமாா், அருண்குமாா், ஜெயபிரகாஷ், நடராஜன், செல்லப்பாண்டி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் அ.தி.மு.க நிா்வாகி மனோஜ் நன்றி கூறினாா்.