நத்தம் ஜவுளி வியாபாரியிடம் ரூ.99 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 18th March 2021 06:14 AM | Last Updated : 18th March 2021 06:14 AM | அ+அ அ- |

நத்தம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது, உரிய ஆவணமின்றி ஜவுளி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ.98,970 ரொக்கம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள மெய்யம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை, பறக்கும் படை அலுவலா் திருமலை தலைமையிலான குழுவினா் சோதனையிட்டனா்.
அந்த காரில் ரூ.98,970 ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை குழுவினா் காரில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், நத்தம் பகுதியைச் சோ்ந்த ஜவுளி வியாபாரி கமா்தீன் என்பது தெரியவந்தது. பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நத்தம் கருவூலத்தில் பறக்கும்படை குழுவினா் ஒப்படைத்தனா்.