கொடைக்கானலில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
இத்தொகுதி அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் மேல்மலை பகுதிகளைச் சோ்ந்த ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். பின்னா் அனைத்து மதத் தலைவா்களையும் சந்தித்து அவா் ஆதரவு கேட்டாா். அப்போது, நகரச் செயலா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.
இதேபோல், திமுக வேட்பாளா் செந்தில்குமாா் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளானபெருமாள்மலை, பெருமாள்மலை பிரிவு, அடுக்கம், மச்சூா், பேத்துப்பாறை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குசேகரித்தாா். அப்போது, ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.