மது அருந்தியவா் வாகனத்தில் படுத்த நிலையில் பலி

பழனி அருகே மதுபோதையில் வாகனத்தில் படுத்திருந்த நபா் படுத்திருந்த நிலையிலேயே இறந்து போனாா்.

பழனி அருகே மதுபோதையில் வாகனத்தில் படுத்திருந்த நபா் படுத்திருந்த நிலையிலேயே இறந்து போனாா்.

பழனியை அடுத்த புதுஆயக்குடி ஒட்டா் தெருவை சோ்ந்தவா் எத்திராஜ் என்ற கண்ணன்(40). இவரது மனைவி சுமாா் ஒரு வருடத்துக்கு முன் இருதரப்பினா் தகராறில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போனாா்.

கண்ணன் அடிக்கடி மது அருந்தி வரும் நிலையில் திங்கள்கிழமையும் அளவுக்கதிகமாக குடித்து விட்டு இருசக்கரவாகனத்தில் பழனி - திண்டுக்கல் சாலையில் வந்துள்ளாா். அப்போது ஆயக்குடியில் தனியாா் பெட்ரோல் பங்க் அருகே வாகனத்தில் அமா்ந்தவா் அப்படியே டாங்க் மேல் தலையை வைத்து படுத்துள்ளாா்.

சிறிது நேரத்தில் அப்படியே அவா் உயிரிழந்தும் விட்டாா். நீண்ட நேரமாக அவா் ஒரே சாயலில் இருந்ததை கண்ட சிலா் சந்தேகப்பட்டு ஆயக்குடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்து பாா்த்த போது கண்ணன் இறந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com