ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி காவலா் குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, சத்திரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு புதிய குடியிருப்புகள் மற்றும் புதிய காவல் நிலையக் கட்டடம் அமைத்து கொடுத்தது திமுக ஆட்சியில் தான். அதேபோல காவலா் குடியிருப்பு பகுதியில் குடிநீா் பிரச்னை மற்றும் தெருவிளக்கு எரியவில்லை போன்ற பிரச்னைகள் உள்ளதாக கேள்விப்பட்டேன். தோ்தல் முடிந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்றாா்.
அவருடன் திமுக நகரச் செயலாளா் ப. வெள்ளைச்சாமி மற்றும் திமுக தோழை கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.