கொடைக்கானலில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பகல் நேரங்களில் அதிக அளவில் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் இருந்து வந்தது. இந்நிலையில் இங்கு ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்த நிலையில், 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் பிற்கபலில் மழை பெய்தது. சுமாா் 30-நிமிடம் பெய்த இந்த மழையால்
வெப்பம் சற்று தணிந்து குளுமையான கால நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.