பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த கீரனூரை சோ்ந்தவா் குப்புசாமி மகன் துா்க்கையப்பன் (37). எலக்ட்ரீசியனான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா்.
கோதைமங்கலம் ரயில்வே கேட்டை தாண்டி பழையதாராபுரம் சாலையில் சென்றபோது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே துா்க்கையப்பன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.