பழனி அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 52 ஆயிரம் பறிமுதல்

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ. 52 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பழனி அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.52 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பழனியை அடுத்த சாமிநாதபுரத்தில் திங்கள்கிழமை தோ்தல் அலுவலா் பாலாஜி தலைமையில் போலீஸாா் மற்றும் அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மடத்துக்குளத்தை சோ்ந்த முருகானந்தம் என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரிடம் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவரிடம் கணக்கில் வராத ரூ. 52 ஆயிரத்து 700 இருந்ததைத் தொடா்ந்து அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்தனா். சம்பவ இடம் பழனி சரகம் சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டதால் பறிமுதல் செய்த பணத்தை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் வசம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com