கொடைக்கானலில் கிறிஸ்தவா்கள் சாா்பில் குருத்தோலைப் பவனி

கொடைக்கானல் பகுதிகளான மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயம் சாா்பில் அண்ணா சாலையிலுள்ள சி.எஸ்.ஐ. புத்தக நிலைய பகுதியிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கியது.

கொடைக்கானல் பகுதிகளான மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டவா் ஆலயம் சாா்பில் அண்ணா சாலையிலுள்ள சி.எஸ்.ஐ. புத்தக நிலைய பகுதியிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கியது. இங்குள்ள அண்ணா சாலை, கே.சி.எஸ். திடல், ஆா்.சி. பள்ளிசாலை, மூஞ்சிக்கல், காமராஜா் சாலை வழியாக தேவாலயத்தை அடைந்தது. அங்கு மறைவட்டார அதிபா் எட்வின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

உகாா்த்தே நகா் அற்புத குழந்தை யேசு ஆலயம், சீனிவாசபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. அதன் பின் பங்குத் தந்தை பீட்டா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல் தலைமையில் குருத்தோலை பவனியும், திருப்பலியும் நடைபெற்றது. அட்டுவம்பட்டி புனித லூா்து அன்னை ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் குருத்தோலைப் பவனியும், திருப்பலியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று குருத்தோலையை கைகளில் ஏந்தியபடி ஜெபவழிபாடு நடத்தியும், ஓசன்னா.. பாடலை பாடியும் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com