ஒட்டன்சத்திரத்தில் பைக் திருட்டு

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திங்கள்கிழமை இரவு திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திங்கள்கிழமை இரவு திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

ஒட்டன்சத்திரம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன் (39). இவா் பேருந்து நிலையம் அருகே உள்ள தேநீா் கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை திங்கள்கிழமை இரவு நிறுத்தி விட்டு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். பின்னா் அவா் திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை.

இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com