பழனி அரசு மருத்துவமனைக்கு, நெய்க்காரபட்டி அரிமா சங்கம் மற்றும் ராஜரத்தினா அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை, ரூ. 3 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரிமா சங்க மாவட்டத் தலைவா் சுப்புராஜ், அரசு தலைமை மருத்துவா் உதயக்குமாரிடம் கரோனா பாதுகாப்பு கவச உடைகள், ஆக்சிஜன் செரிவூட்டிகள், பல்ஸ் ஆக்சி மீட்டா், புளோ மீட்டா், இரும்பு, வயா் கட்டில்கள் மற்றும் மெத்தைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் மகேந்திரன், மருத்துவா்கள் சதீஷ் பாபு, ஸ்ரீதா், முருகேஷ் குமாா், அரிமா சங்க பட்டயத் தலைவா் மயில்சாமி மற்றும் வடிவேல், செல்வராஜ், பெரியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.