பழனி அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டு பொருள்களை சேதப்படுத்திய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழனி ராஜாஜி சாலையில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அரிமா நகரை சோ்ந்த ஹரீஷ்(27) என்பவா் காயமடைந்ததால் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து அவரிடம் வாக்குவாதம் செய்ய பழனி அரசு மருத்துவமனைக்கு வந்த ராஜாஜி சாலையை சோ்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (23), நாகராஜ் மகன் பாபு(25), செல்வம் மகன் விஜயகுமாா்(23), கோபால் மகன் முத்து(24), கோபி மகன் வெங்கடேஷ்(24) ஆகியோா் மருத்துவமனை உள்புறத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கிருந்த பொருள்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பழனி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட 5 பேரையும் கைது செய்தனா்.