பழனி: பழனியில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ஐ.பி.செந்தில்குமாா், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ரவி மனோகரனைக் காட்டிலும் சுமாா் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையே பல்வேறு திமுகவினரும் கரோனா முழு பொதுமுடக்கம் என்பதால் வீடுகள் முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாடினா். இந்நிலையில் திங்கள்கிழமை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நகர நிா்வாகிகள் ஏராளமானோா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.