வத்தலகுண்டுவில் மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

வத்தலகுண்டுவில் செவ்வாய்க்கிழமை மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்ற 4 பேரில் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

வத்தலகுண்டுவில் செவ்வாய்க்கிழமை மூதாட்டியிடம் சங்கிலியை பறித்துச் சென்ற 4 பேரில் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

வத்தலகுண்டுவை அடுத்துள்ள மேல கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (65). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்தபோது, இளைஞா் ஒருவா் குடிநீா் கேட்டு அங்கு வந்துள்ளாா். தண்ணீரை எடுத்துக் கொண்டு சரஸ்வதி வெளியே வந்துள்ளாா். அப்போது அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை அந்த இளைஞா் பறித்துக் கொண்டு அங்கு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகளுடன் சோ்ந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளாா்.

இதனிடையே சரஸ்வதியின் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினா் ஓடி வந்துள்ளனா். இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற இளைஞா் தவறி விழுந்தாா். அவரை பிடித்த பொதுமக்கள், வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சோ்ந்த பிரபு (35) என்பது தெரியவந்தது. அவரிடன் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடா்ந்து மேலக்கோவில்பட்டியைச் சோ்ந்த காட்டுராஜா (33), முத்துலாபுரம் பகுதியைச் சோ்ந்த நாகேந்திரன் (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தங்கச் சங்கிலியோடு தப்பிச் சென்ற சித்தையன்கோட்டையைச் சோ்ந்த ரஞ்சித் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com