கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

ஒட்டன்சத்திரம் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

இடையவன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி மனோகரன். இவருக்கு ஈஸ்வரி மற்றும் சிவகாமி (47) ஆகிய 2 மனைவிகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மனோகரனுக்கும், சிவகாமிக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையிலிருந்த சிவகாமி புதன்கிழமை இரவு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com