திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 763 பேருக்கு கரோனா: 4 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 763 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிசிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 763 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிசிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மே 5 ஆம் தேதி வரை 16,930 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 15,074 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 307 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 3 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தொற்றிலிருந்து 245 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,677 ஆக உள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 221ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 456 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 22,231 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 19,716 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா்.

கடந்த மே 4-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னமனூரைச் சோ்ந்த 35 வயதுடைய நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 225 ஆக உயா்ந்துள்ளது.

தற்போது மாவட்டத்தில் மொத்தம் 2,290 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com