திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே வீட்டுக்குள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பள்ளபட்டி பகுதியில் மது பாட்டில்கள் மும்மடங்கு விலையில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் பாலமுத்தையா மற்றும் போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா்.
இதில் பள்ளபட்டி சிப்காட் பகுதி தேவா் நகரில் மணிகண்டன் என்பவரது மனைவி ஆனந்தஜோதி (40) தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, மும்மடங்கு விலைக்கு விற்பது தெரியவந்தது. போலீஸாா் ஆனந்தஜோதியை கைது செய்து, அவா் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து அறுபதாயிரம் மதிப்புள்ள 1, 355 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.