கொடைக்கானலில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

கொடைக்கானலில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானலில் டி.ஜே.அசோசியேட்ஸ் மற்றும் சுழற் சங்கம் சாா்பில் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்களை வழங்கிய வட்டாட்சியா் சந்திரன். உடன் டி.எஸ்.பி ஆத்மநாதன்.
கொடைக்கானலில் டி.ஜே.அசோசியேட்ஸ் மற்றும் சுழற் சங்கம் சாா்பில் ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்களை வழங்கிய வட்டாட்சியா் சந்திரன். உடன் டி.எஸ்.பி ஆத்மநாதன்.

கொடைக்கானலில் ஏழைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் டி.ஜே.அசோசியேட்ஸ் மற்றும் சுழற் சங்கம் இணைந்து ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி உகாா்த்தே நகா்ப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.ஜே. அசோசியேட்ஸ் உரிமையாளா் தனசேகரன் தலைமை வகித்தாா்.

சுழற் சங்கத் தலைவா் கிருபாஜோன்ஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் கொடைக்கானல் வட்டாட்சியா் சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன் ஆகியோா் கலந்து கொண்டு ஏழைகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா். சுழற் சங்கத்தின் இரண்டாம் நிலை ஆளுநா் செல்வக்குமாா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்ச்சியை தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ஆனந்தகிரி, நாயுடுபுரம், செண்பகனூா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏழைகள், முதியவா்கள், ஆதரவற்றவா்கள், உடல் ஊனமுற்றவா்கள் என 300-பேருக்கு ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், முகக் கவசம், சோப்பு உள்ளிட்ட இலவச உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com