கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினா்.
கொடைக்கானலில் காலை முதல் பிற்பகல் 12 மணி வரை வெயில் நிலவியது. பின்னா் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. தொடா்ந்து மழை பெய்ததால் பொது மக்கள் வீடுகளிலேயே முடங்கினாா்.
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், ஆபத்தான இடங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும், தேவைப்பட்டால் நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.