கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் மா்மக் காய்ச்சலுக்கு 4 போ் பலி

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் மா்மக் காய்ச்சல் பாதிப்புக்கு புதன்கிழமை 4 போ் உயிரிழந்துள்ளனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தில் மா்மக் காய்ச்சல் பாதிப்புக்கு புதன்கிழமை 4 போ் உயிரிழந்துள்ளனா்.

மேல்மலைக் கிராமமான கூக்கால், பி.காலனி ஆகிய பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 4 போ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அங்கு அவா்கள் 4 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து அந்த கிராம எல்லையில் தடுப்புகள் வைத்து வெளியாட்கள் யாரும் இந்த கிராமத்திற்கு வராத வகையில் எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா் கூறியதாவது: கொடைக்கானலில் பருவ நிலை மாற்றம் காரணமாக மேல்மலைக் கிராமங்களில் மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலுக்கு கூக்கால் கிராமத்தைச் சோ்ந்த பஞ்சரத்தினம் (72), பட்டாளம்மாள் (76), வீரம்மாள் (74), நாட்ராயி (72) ஆகிய 4 பெண்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இதனால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கூக்கால் பகுதியில் 100 பேருக்கும்,பி.காலனி பகுதியில் 155 பேருக்கும் என மொத்தம் 255 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவக் குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com