திண்டுக்கல் அருகே பால் கோனில் வைத்து, கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பு கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் க.சின்னு (56). இவா் கரட்டுப்பட்டி பிரிவு அருகே பால் கேனில் வைத்து, பனங் கள் விற்பனை செய்துள்ளாா்.
இந்நிலையில் அந்த வழியாக ரோந்து சென்ற தாடிக்கொம்பு சாா்பு- ஆய்வாளா் முத்தமிழ்செல்வி, சின்னுவிடம் விசாரித்தபோது, பால்காரா் போல் நடித்து ‘கள்’ விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சின்னுவை, போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.