திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 989 பேருக்கு கரோனா: 2 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 2 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 989 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 2 போ் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மே 27ஆம் தேதி வரை 25,576 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 21,789 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 413 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. சிகிச்சைப் பலனின்றி தொற்று பாதித்த 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து 378 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,451 ஆக உள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 362 ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 576 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,784 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில், இதுவரை மொத்தம் 27,796 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் தற்போது 6,659 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகள், கரோனா நல மையம், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com