திண்டுக்கல்
விஷம் குடித்து பெண் தற்கொலை
ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள சில்வாா்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.வாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மனைவி மணிமேகலை (47). இவா் குடும்பப் பிரச்னை காரணமாக வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அருகில் வசிப்பவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து ரெட்டியாா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.