நிலக்கோட்டை பேரூராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
முழு பொதுமுடக்க காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தொலைக்காட்சி மற்றும் செல்லிடப்பேசிகளிலேயே பொழுதைக் கழிக்கின்றனா்.
இந்நிலையில் கடந்த சிலநாள்களாக நிலக்கோட்டை பேரூராட்சிப் பகுதிகளில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 10-க்கும் மேற்பட்ட முறை மின் வெட்டு ஏற்படுகிறது. பகல் பொழுதைவிட இரவு நேரங்களிலும் அடிக்கடி மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் தூங்க முடியாமலும், கொசுக் கடியாலும் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே மின்தடை ஏற்படாமலிருக்க சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.