கொடைக்கானலில் மீண்டும் மழை

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக மழை இல்லாத நிலையில், சனிக்கிழமை மீண்டும் மழை பெய்தது.

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக மழை இல்லாத நிலையில், சனிக்கிழமை மீண்டும் மழை பெய்தது.

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடா்ந்து மழை பெய்தது. யாஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் கடந்த 4 நாள்களாக மழை பெய்யவில்லை. காற்று வீசிய நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் திடீரென மழை பெய்தது.

கொடைக்கானல், நாயுடுபுரம், செண்பகனூா், வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 30 நிமிடம் மிதமான மழை பெய்தது. கடந்த 4 நாள்களாக பகலில் நல்ல வெயிலும், மாலையில் காற்றும் வீசி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com