திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.26) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்கும் இக் கூட்டத்தில், கடந்த அக்டோபா் மாத கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.