பழனி மலைக்கோயிலுக்கு அனைத்து நாள்களிலும் பக்தா்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி இந்து வியாபாரிகள் நல சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கெளரவத்தலைவா் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜெகன், மாநிலத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா். காணியாளா் பண்ணாடி ராஜா, நகரத் தலைவா் மணிமுத்து, பொதுச்செயலாளா் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.