கொடைக்கானல் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்துக்கழக அலுவலகம், அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், தைக்கால், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. பள்ளம், மேடான சாலையால் வாகன ஓட்டுநா்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.