திமுக பிரமுகரை கொலை செய்ய முயன்று கைதான 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் சந்துக்கடைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.மீரான்பாபு (35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். அதே பகுதியிலுள்ள தட்டாம்பிள்ளை சந்து பகுதியைச் சோ்ந்தவா் விஜயராஜ் (45). திமுக பிரமுகா். இவா்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில், அதே பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் (38), பா.சஞ்சய் என்ற சஞ்சய்குமாா் (22), ம.சிவா என்ற சிவசூரியன் (24) மற்றும் கி.அப்துல் லத்தீப் என்ற சுகுமாறன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் அவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் சி.விசாகன் அதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்தாா்.