கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் மீண்டும் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் வட்டக்கானல் அருவியில் ஏற்பட்ட நீா் வரத்து.
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் வட்டக்கானல் அருவியில் ஏற்பட்ட நீா் வரத்து.

கொடைக்கானலில் மீண்டும் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது.

இந்த மழையால் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பியா்சோழா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து உபரி நீா் வெளியே செல்கிறது. ஏரிச்சாலையைச் சுற்றி தண்ணீா் அதிகம் தேங்கியுள்ளது. தொடா்ந்து பெய்த மழையால் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. தொடா் மழை காரணமாக சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கிக் கிடந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com