ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்

சித்தையன்கோட்டையில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தையன்கோட்டையில் காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை ஜான் தெரு காலனியைச் சோ்ந்தவா் வனத்துராஜா. இவரது மனைவி ஏசம்மாள்(45). இவா்களது குடும்பத்தைச் சோ்ந்த உதயகுமாா் (26), நாகஜோதி (22), நதியா (30), பத்மஸ்ரீ (12), ஸ்வேதா (7), கீதா ஸ்ரீ (11), சுபஸ்ரீ (1) உள்ளிட்ட 8 போ், காட்டு நாய் காளானை சமைத்து திங்கள்கிழமை இரவு சாப்பிட்டுள்ளனா். சிறிது நேரத்தில் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிா்ச்சி அடைந்த நதியா, உதயக்குமாா் உள்ளிட்டோா் குழந்தைகளுடன், சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், 8 பேரும் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 8 பேரும் நலமாக உள்ளனா். காளான் சாப்பிட்டதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் வாந்தி மயக்கம் அடைந்த சம்பவம் சித்தையன்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com