பழனி: பழனியில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
பழனி நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு நெரிசல் மிக்க பகுதியான திண்டுக்கல் சாலை, ரயில்வே பீடா் சாலை, புதுதாராபுரம் சாலைகளில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து விபத்துகள் குறைந்த நிலையில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. இதையடுத்து திங்கள்கிழமை போக்குவரத்து போலீஸாா் திண்டுக்கல் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
பேருந்து நிலையத்திலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.